காந்தி பிறந்தமண்
இரத்தக்கறை படியக் கிடக்கிறதே!
சாந்தி தவழ்ந்த மண்ணின்
சரித்திரம் சரிகிறதே!
தியாகத் தலைமுறையை
தீப்பந்தம் மறைக்கிறதே!
அபாயம் நீங்கி – நல்ல
அமைதியை மனம் நாடிடுதே!
கடவுளின் பெயராலே
கலகங்கள் நடக்கிறதே!
மதவெறி தலைதூக்கி
மனிதநேயத்தை அழிக்கிறதே!
விஞ்ஞான இரகசியங்கள்
விலைபேசப் படுகிறதே!
மெய்ஞான மடங்களிலே – தேசம்
மண்டியிட்டுக் கிடக்கிறதே!
அரசியல் கழிசடைகளால் – நாடு
அசிங்கமாகிப் போனதே!
சரித்திரச் சின்னங்கள்
சரிக்கப்பட்டு கொண்டிருக்கிறதே!
விருப்பு வீழ்கிறதே!
வெறுப்பு வளர்கிறதே!
அகிம்சை தளர்கிறதே!
இம்சை துளிர்க்கிறதே!
ஆக்கம்: இனியவன் ஹாஜி முஹம்மது