குவைத் வாழ் தமிழர்களுக்காக ஃபஹாஹீல் பகுதியில் இயங்கி வரும் “இஸ்லாமிய வழிகாட்டி மையம்” (IGC), கடந்த 12 வருடங்களாக “ரியாளுல் ஜன்னா” – சுவனத்துப் பூஞ்சோலை – கூடாரம் அமைத்து செய்து வருவதைப் போன்றே இவ் வருடமும் ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த அறிவிப்பினைக் கண்ணுறும் குவைத் அல்லாத பிற நாடுகளில் உள்ள வாசகர்கள், இதனை குவைத்தில் வசிக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்தால் அவர்கள் பயன்பெறுவர். (Link: http://www.satyamargam.com/news/world-news/2379-kuwait-igc-ramadan-2014-programs.html )
அபூஹலிஃபா, மங்காஃப், ஃபஹாஹீல் பகுதிகளிலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் கூடாரத்திற்கு வர வாகன வசதி தேவைப்படுவோர் குவைத்தில் 66868270 அல்லது அழைப்பிதழில் இடம் பெற்றுள்ள எண்களைத் தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பைக் காணவும்.