கஷ்மீருக்கு 22.4.2025 அன்று சுற்றுலா சென்ற 28 இந்தியர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, கொலையாளிகள் மாயமாக மறைந்துவிட்டார்கள். ஏறத்தாழ 30 நிமிடங்கள் நிகழ்ந்த அப்பாவிப் பொதுமக்கள் மீதான கொலையாளிகளின் தாக்குதலின்போது, கஷ்மீர் போலீசோ, இராணுவமோ, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களோ எவரும் உதவிக்கு வரவில்லை. உள்ளூர் ஏழை முஸ்லிம்கள்தாம் எஞ்சிய அனைவரையும் காப்பாற்றி உள்ளனர். ”ஆர்ட்டிகிள் 370ஐ அகற்றிவிட்டால் கஷ்மீர் பாதுகாப்பான பூமியாகிவிடும்” என்று கதையளந்த ஒன்றிய அமைச்சர்கள், ஒன்றிய உளவுத்துறையுடன் இணைந்து ஒரு வாரமாகக் கொலையாளிகளைத் தேடிவருகின்றனர்.
கீழ்க்காணும் கேள்விகளையும் படித்து வைப்போம் :
கேள்வி 1: திட்டமிடப்பட்ட மோடியின் காஷ்மீர் பயணம் ஏன் இரத்து செய்யப்பட்டு சவுதி பயணமாக மாற்றப் பட்டது.
கேள்வி 2: அமெரிக்க துணை ஜனாதிபதி இந்தியா வந்திருந்த நேரம், அவரிடம் பேச வேண்டிய வரி சம்பந்தப்பட்ட விசயங்கள் ஆயிரம் இருக்க ஏன் அவசரமாக சவுதி ஓடினார்
கேள்வி 3: தாக்குதலுக்கு ஒரு மாதம் முன்பு அமித்ஷா தலைமையில் நடந்த காஷ்மீரின் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் அந்த மாநிலத்தின் முதல்வர் உமர் அப்துல்லா மட்டும் வேண்டுமென்றே தவிர்க்கப் பட்டது ஏன்? காஷ்மீரின் சட்டம் ஒழுங்கு ஒன்றிய அரசின் வசம் இருந்தாலும் அங்குப் பேசப் படுவதை அந்த மாநில முதல்வர் அறிந்து கொண்டால் என்ன தவறு? அல்லது இந்த தாக்குதலுக்கான திட்டமே அங்குதான் தீட்டப் பட்டதா?
கேள்வி 4: பெகல்காம் டூர் சென்று வந்தவர்கள் அனைவரும் சொல்லும் ஒரே விசயம் அங்குப் பாதுகாப்பு அதிகமாக இருக்கும்; இராணுவ வீரர்கள் எப்போதும் சுற்றிக் கொண்டே இருப்பார்கள் என்பது. அன்று மட்டும் இராணுவ வீரர்கள் எங்குச் சென்றனர்?
கேள்வி 5: அடிபட்டவர்களையும் அங்கிருந்த கஷ்மீரிகள்தாம் சுமந்து கொண்டு கீழே இறங்கினர். கடற்படை துணை மார்ஷல் ஒருவர் குண்டடி பட்டு 1.5 மணி நேரம் உயிரோடு இருந்திருக்கின்றார். எந்த இராணுவ உதவியுமே வரவில்லை எனில் மரணங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டவையா??
கேள்வி 6: அனைத்து ஊடகங்களும் முதலில் ”இந்துவா?” எனக் கேட்டு தீவிரவாதிகள் சுட்டதாகக் கூறிய நிலையில், பிறகு வந்த செய்திகள் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும் எங்கிருந்தோ பதுங்கி இருந்ததுதான் சுட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். எனில் காந்தியைக் கொலை செய்யப் போகும் போதே ஒருவேளை தான் சுடப்பட்டு இருந்தால் சுட்டவன் முஸ்லிம் எனக் கலவரம் பரவ வேண்டும் என்று சாவர்கரின் சீடன் கோட்சே கையில் இஸ்மாயில் என பச்சை குத்திக் கொண்டதன் தொடர்ச்சியா இது ?
ஆயிரம் ஆயிரம் கேள்விகளைப் பாதிக்கப் பட்டவர்களும் காஷ்மீரிகளும் ஊடகங்களின் முன் கேட்கின்றனர். அவை அனைத்துமே எடிட்டிங் ரூமில் வெட்டப் படுகின்றன. எனில் நடப்பவை அனைத்துமே தற்செயலானவை இல்லையா?
பதில் இருந்தும் அவர்கள் சொல்ல மாட்டார்கள்…
ஏனெனில் வெறுப்பைத் தொடர்ந்து விதைப்பதால் மட்டுமே அவர்கள் தொடர்ந்து தேர்தல்களில் வெற்றி பெற்று வருகின்றனர். இறந்தவர்களில் பலரும் அவர்களுக்கு வாக்களித்தவர்களாக இருக்கலாம். ஆனால் இவர்களின் பசியும் வெறியும் இன்னும் அடங்கவில்லை.
RSSஇன் நூற்றாண்டு விழா இன்னும் ஏதோ ஓர் பெரிய இலக்கை நோக்கி முன்னேறுகின்றது.
நன்றி : https://www.facebook.com/k.yaseenros
மேற்கணும் கேள்விகளுக்கான விடையைக் கர்னல் அமீத் பீஸ் கூறுகின்றார்:
பால்நொய் எனும் இந்திய எல்லையைக் கடந்துதான் பஹல்காம் என்ற இடத்தை அடைய முடியும்.. ”இராணுவ வீரர்கள் பால்நொய் என்ற இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். அவர்கள் வேண்டுமென்றே அந்தப் பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர்” என்று அந்தப் பகுதியைக் காவல் காத்து வந்த கர்னல் அமீத் பீஸ் குற்றம் சாட்டுகின்றார்… |
நன்றி : https://x.com/DixadinaDMK/status/1917054796202193056