பசுமாட்டைக் கொன்று முஸ்லிம்கள் மீது பழி சுமத்திய இந்து மகா சபா நிர்வாகி கைது!

Share this:

ஆக்ரா (09 ஏப்ரல் 2023) : பசு மாட்டைத் திட்டமிட்டு கொன்று, அதன் மூலம் பெரும் மதக் கலவரம் நடத்துவதற்காக மூன்று அப்பாவி முஸ்லிம்கள் மீது பழியைப் போட்ட அகில் பாரத் இந்து மகா சபா (Akhil Bharat Hindu Mahasabha) அமைப்பின் தேசியச் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜாட் கைது!

ஆக்ராவில்  சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை ராம நவமியாகும்.

இந்நிலையில்  ரிஜ்வான், முஹம்மது நகீம், முஹம்மது ஷானு, இம்ரான் ஆகிய முஸ்லிம்கள் பசுவைக் கொன்று இந்துக்களின் புனிதத்தை களங்கப் படுத்தி விட்டதாக, இந்து மகா சபா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து ஆக்ரா காவல்துறையின் மூன்று முஸ்லிம்களையும் கைது செய்தனர்.

உ.பி யில் இந்து மகா சபா செய்த சதி அம்பலம்!

ஆனால், காவல் துறையின் தீவிர விசாரணையின் முடிவில் உண்மை அம்பலமானது. இந்து மகா சபையே திட்டமிட்டு பசு மாட்டைக் கொன்றது அம்பலமாகி அப்பகுதி மக்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆக்ராவில் உள்ள முஸ்லிம்களும் இந்துக்களும் நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருவதைக் குலைத்து, ராம நவமி அன்று பெரும் மதக்கலவரம் ஏற்படுத்த இந்து மகா சபை திட்டமிட்டது காவல்துறையினரின் விசாரணையில் அம்பலமானது என்று தெரிவித்துள்ளார் DCP சூரஜ் ராய்.

கலவரம் நடத்த முதல் கட்டமாக, இந்து மகா சபையினர் கடந்த மார்ச் 29, 2023 ஆம் தேதி மெஹ்தப் பாக் பகுதியில் வைத்து ஒரு பசு மாட்டைக் கொன்றனர்.

அதன் பின், ரிஜ்வான், முஹம்மது நகீம், முஹம்மது ஷானு, இம்ரான் ஆகியோர் சேர்ந்து புனிதமான கோமாதாவைக் கொன்று விட்டதாக புரளியை பரவ விட்டனர்.  அத்துடன், காவல் நிலையத்திற்குச் சென்று பொய் புகாரும் அளித்தனர்.

நன்றி:

இந்தியா டுடே: Hindu Mahasabha workers slaughtered cows to cause communal violence, says UP Police

இந்தியன் எக்ஸ்பிரஸ்: BHM workers slaughtered cow to incite communal violence on Ram Navami in Agra: Police

டைம்ஸ் ஆஃப் இந்தியா: Right-wing group killed cow on Ram Navami to implicate rivals: Agra police

கலவரம் செய்துவிட்டு பிற மதத்தினர் மீது பழி சுமத்தும் பாஜகவினரின் பட்டியலை, சத்தியமார்க்கம்.காம் தளத்தில் #தனக்குத்தானே என்ற TAG மூலம் தொகுப்பாக வாசிக்கலாம். (லிங்க்)


Share this: