சத்தியமார்க்கம்.காம்

பொன்.....! print Email
கதை-கவிதை - கவிதை
திங்கள், 19 பிப்ரவரி 2007 18:04

முத்திரை பசும்பொன் மட்டுமா உலகில் பொன்? இல்லை இல்லை.....
முகில் கிழக்கும் ஆதவனின் மூலக்கதிர்கள் அனைத்தும் பொன்னே!

வெள்ளி நிலா ஒளியும் பொன்னே! விடியும்வரை
வெள்ளமென கண் சிமிட்டும் தாரகையும் பொன்னே!

வற்றாத ஜீவ நதிகளும் பொன்னே! வரு மழையும் பொன்னே!
இல்லை இல்லை என்று சொல்லாத எல்லா இதயங்களும் பொன்னே!

வள்ளலாய் நின்று வறியோர்க்கு வாரித்தரும் கரங்களும் பொன்னே!
பள்ளமிலா சமுதாயம் பரிமளிக்க செய்பவனும் பொன்னே!

மழலைகளின் கள்ளமிலா சிரிப்பொலியும் பொன்னே!
ஏழைகளின் துள்ளல் பசிக்கு உணவளிக்கும் மனித நேயமும் பொன்னே!

விதவைக்கு வாழ்வளிக்கும் விவேக ஆடவரும் பொன்னே!
உதவிக்கு ஓடிவந்து உற்றதை செய்பவரும் பொன்னே!

மதவெறி கொல்லுகின்ற மக்களும் மாசறு பொன்னே!
இதமாக பேசி இன்னல் களைபவரும் நாட்டின் பொன்னே!

பெண் சிசுவை கொல்லாத பெற்றோரும் உலகில் பொன்னே!
பெண்மை போற்றி பெருமை சேர்த்தலும் பொன்னே!

உவமையாய் திகழ்ந்து உண்மை பேசுகின்ற உத்தமர்கள் நாட்டின் பொன்னே!
உள்ளமெலாம் மகிழ்ந்திடவே கற்பை போற்றும் காரிகையும் பொன்னே!

கர்ம வீரனுக்கு காலமும் பொன்னே! அவன் செய்யும்
கடின உழைப்பும் பொன்னே! கடமை உணர்வும் பொன்னே!

கட்டுப்பாட்டில் உள்ள நல்ல குடும்பமும் களிப்புறு பொன்னே!
கவிஞர்களின் கவிதை சுரக்கும் மணற்கேணி மனமும் பசும் பொன்னே!

இறையோன் நமக்களித்த இஸ்லாமும் பொன்னே! வல்லோன் அவன் படைத்த

இயற்கை அனைத்தும் பொன்னே! இதமான தென்றலும் பொன்னே!

ஆக்கம்: அபுயாசின்

கருத்துக்கள் (5)add comment
0
jafarall:
அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!!
1

February 20, 2007 01:54
0
Abdul Ghani:
Intha Kavithaiyyum Ponne
2

February 20, 2007 04:14
0
Mohammed Siajudeen:
பொன்னிலும் இத்தனை வகையுண்டா? மனிதர்களாகிய நாம் தான் குறிப்பிட்ட ஒன்றை மட்டும் பொன் என்கிறோமோ?
3

February 20, 2007 05:07
0
முஷ்தாக் முஹம்மத்:
அல்ஹம்துலில்லாஹ் ''பொன்''னை விட பன்மடங்கு விலையுயர்ந்த வாசகங்கள். முஷ்தாக் முஹம்மத்
4

February 20, 2007 13:40
0
kalam shaick abdulkader:
I like this style as I am also Tamil Poet.
5

November 21, 2007 18:59

கருத்து எழுதுக :
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

Random Quran Verses

2:119 (நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமுட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம். நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர்.

விருப்பத் தேர்வுகள்

புதிய கருத்துக்கள்

சஃபி : அன்பான ஷாலினி, உங்களுக்கு அண்மையிலு...


Bharat : இந்தியாவை துண்டாட, காஷ்மீரத்தை பிரிக...


அ.அப்துல் ஹமீத் : வெற்றீ பெற்ற்வர்களுக்கு வாழ்த்துக்...


Satyamargam.com : Dear Shalini, Thanks for visiting and your valuable comment. May Almighty in His Infinite Mercy and...


Shalini : Hai, I am Shalini. I am hindu. But i know all the details about allah. I want to convert muslim. in ...


vijay : kudia sekaramaa varuvainga.......... ..................by your friend ..........................vija...


ANEES FATHIMA : அஸ்ஸலாமு அலைக்கும் எல்லா பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய நல்ல குறிப்புக்கள்


sarfdin : அருள் முருகன் சகோதரா முஸ்லிம்களில் ப...


Naseema : அறிவுப்போட்டிகளை பல தளங்கள் வெளியிட...


ummu afsy : salaamz,ALLHA has given eough freedom for woman,so may all muslims and non-muslim must support all m...


MOHAMED RAFI : RAFI, THIS VERY INFROMATIVE


A.JAHIR HUSSAIN.Sharjah UAE { ATHALAIYUR } : அஸ்ஸலாமு அலைக்கும்... புனித மிகு ரமலா...



You are here  : முகப்பு கவிதை கேளுங்கள் பொன்.....!