| தவறான நடைமுறைகள் |
|
|
| தொடர்கள் - இஸ்லாமிய தொடர்கள் |
| திங்கள், 14 செப்டம்பர் 2009 13:01 |
|
தவறான கருத்து்கள்: எட்டு ரக்அத்கள், வித்ரு மூன்று ரக்அத்கள் தொழுவதற்குப் பதிலாக 20 ரக்அத்களும் வித்ரு மூன்றும் தொழுவது.
இந்த தொழுகையில் முழுக் குர்ஆனையும் ஓதியாக வேண்டும் என்று நம்புவது; அதற்காகநிறுத்தி நிதானமாக ஓதாமல் அவசர அவசரமாக ஓதுவது.
சபீனா என்ற பெயரில் ஒரே இரவில் முப்பது ஜுஸ்வையும் ஓதி குர்ஆனுடன் விளையாடுவது.
தமாம் செய்தல் என்ற பெயரில் தொழுகையில் இல்லாத வாசகங்களை தொழுகையினூடே சேர்ப்பது.
ரமளான் இரவுகளில் இஷாவுக்குப் பின், ஃபஜ்ருக்கு முன் குறைந்த பட்சம் 7, அதிக பட்சம் 13 ரக்அத்கள் தொழுவது தான் சுன்னத் (நபிவழி) என்று கூறுங்கள். 20 ரக்அத் தொழுவதற்கு ஆதாரப்பூர்வ நபிவழியில் அடிப்படை இல்லை. 7 முதல் 13 வரை ரக்அத் எண்ணிக்கையையே செயல்படுத்துங்கள்; அவை முடிந்தபின் அவரவர் வீடுகளில் இயன்றவரையில் தொழுங்கள். உபரியான (நஃபிலான) தொழுகைக்கு எண்ணிக்கை நிர்ணயம் செய்யாதீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவன். ஆக்கம்: உம்மு ஸாலிஹா.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (8)
![]()
"இரவுத்தொழுகை என்பது இரண்டு இரண்டாகும்.சுப்குத்தொழுகையின் நேரம் வந்துவிடும் என பயந்தால் ஒரு ரக அத் வித்ர் தொழுங்கள்"என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்:இப்னு உமர்(ரழி)நூல்:புகாரி,முஸ்லிம்)
இந்த நபிமொழியிலிருந்து இரவு நேரத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் இரண்டு இரண்டாக தொழுது கொண்டே போகலாம் ரக் அத் எண்ணிக்கையை வறையறுக்க முடியாது என்று தெரிய வருகிறது.ஆகவே இதை தவறான கருத்தாக எவ்வாறு எடுத்துக்கொள்ள முடியும்? 1
September 14, 2009 15:57
அஸ்ஸலாமு அலைக்கும்,
உம்மு ஹுதைஃபா அவர்கள் சரியான நெத்தியடி கேள்வியைக் கேட்டுள்ளார்கள். "தவறான கருத்துக்கள்" எனும் இவர்களது போதனையில் உள்ள தவறான கருத்தைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி. இந்த 8 ரக்'ஆத் அல்லது 20 ரக்'ஆத் என பூசலுக்கு உள்ளாகும் இரவுத் தொழுகையாக இருந்தாலும் சரி, தொழுகையில் செய்முறைகள் விஷயமாக இருந்தாலும் சரி, "மத்ஹபுகளை பின்பற்ற வேண்டாம்" என்று சொல்பவர்களில் ஒரு ஒற்றுமையான செயல்பாடுகள் இருக்கும். அது எப்படி ? நபி அவர்கள் பல மாதிரி தொழுதுள்ளார்கள் என சஹீஹ் ஹதீஸ்கள் உள்ளன. மத்ஹபுகளைப் பின்பற்றாமல் இருக்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் பல்வேறு விதமாக அல்லவா தொழவேண்டும் ? அப்போது தானே அவர்களை மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் எனக் கூறமுடியும் ? ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே விதத்தில் தொழுது, தனி மத் ஹபினைத்தானே உருவாக்கியுள்ளார்கள் ? உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், தொழுகை அமர்வில் விரலசைப்பவர்களில் எல்லோரும் எப்படி எட்டு ரக்'ஆத்துக்களில் எழுந்து சென்றுவிடுகிறார்கள் ? அப்போ அது மத்ஹபுதானே ? 2
September 15, 2009 09:25
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே // "இரவுத்தொழுகை என்பது இரண்டு இரண்டாகும்.சுப்குத்தொழுகையின் நேரம் வந்துவிடும் என பயந்தால் ஒரு ரக அத் வித்ர் தொழுங்கள்"என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்:இப்னு உமர்(ரழி)நூல்:புகாரி,முஸ்லிம்) // இந்த நபி மொழி மூலம் இரவு தொழுகைகள் எத்தனை ரக் அத்துகள் வேண்டுமானாலும் தொழலாம் என்பதை விளங்க முடிகிறது ஆகையால் 20 ரக் அத்துக்கள்??? தொழலாம் என்று சிலரும்... எத்தனை ரக் அத்துகள் வேண்டுமென்றாலு தொழலாம் என்று சிலரும் .... சுன்னத்து 8 அல்லது , தராவிஹ் 20 ரக் அத்துகள் இது போக மீதி எத்தனை வேண்டுமென்றாலும் நபிலாக தொழலாம் தவறில்லை என்று சிலரும் கருத்து கொண்டுள்ளனர்.... இவர்கள் அனைவரும் ரமலானிலும் ரமலானல்லாத மாதங்களிலும் இரவில் நபி(ஸல்) அவர்கள் 11 ரக் அத்துக்களுக்கு மேல் (அதிகமாக ) தொழுததில்லை எனும் ஆயிஷா ரலி அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் ஹதீஸையும், அதிகபட்சமாக அவர்கள் 13 ரக் அத்துக்கள் வரை தொழுதுள்ளார்கள் எனும் இன்னிமொரு ஆதாரபூர்வமான ஹதீஸையும்... மறந்து விடுகின்றனர் அல்லது இதை பற்றி வேறு தவறான நிலையில் உள்ளனர் என்று தோன்றுகிறது. மேலும் நபி ஸல் அவர்கள் இரவு தொழுகையை பின்னிரவிலும் தொழுதுள்ளனர் எனும் ஹதீஸ்கள் ஒரு ரக் அத்தின் நீளம் சில நேரம் 'ஸுரே பக்ரா' 'ஆல இம்ரான்' போன்ற பெரிய சூராக்கள் ஓதி கால்கள் வீங்கும் அளவுக்கு தொழுதுள்ளனர் என்பதை கூறும் ஹதீஸ்களை ஆய்வு செய்து பார்க்கும் போது... நபி ஸல் அவர்கள் 13க்கு மேல் நபிலாகவோ கூட அதிகப்படுத்தவில்லை என்று அறிய முடிகிறது. இந்நிலையில் மேற்கண்ட ஹதீஸ் ( இரவில் பின்னேரத்தில் எழுந்து அல்லது பெரிய சூராக்கள் ஓதி) இரண்டிரண்டாக தொழுது கொண்டு இருக்கும் போது ( இந்த 11 அல்லது 13 எனும எண்ணிக்கையை முடிக்கும் முன்னர் ) வித்ரு மூன்று ரக் அத்துக்கள் தொழும் முன்னர் சுபுஹ் நேரம் வந்து விடுமென்று பயந்தால் ஒரு ரக் அத் வித்ரு தொழுது கொள்ளுங்கள் என்ற கருத்துப்படி விளங்குவதே சரியாகவும் நபிவழிக்கு நெருக்கமானதாகவும் உள்ளது..என்பதை கவனிக்கவும். அல்லாஹ் மிக அறிந்தவன். 3
September 24, 2009 19:18
மேற்சொல்லப்பட்ட ஹதீஸை அடிப்படையாக வைத்து தான் அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்கள்"இரவுத்தொழுகைக்கு எண்ணிக்கை நிர்ணயம் செய்யக்கூடாது எவ்வளவு வேண்டுமானாலும் தொழுதுகொள்ளலாம்"என்று ஃபத்வா கொடுத்துள்ளார்கள்.உண்மையிலேயே பின் பாஸ் அவர்கள் உலகம் போற்றும் மிகச்சிறந்த ஆலிம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இருக்க முடியாது.அல்லாஹ்வின் நல்லடியாராக திகழ்ந்தவர்.எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முஃப்தி.ஆகவே அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இருக்க முடிய்யாது என்பது என் கருத்து.அல்லாஹு அஃலம்.
4
September 25, 2009 21:25
அஸ்ஸலாமு அலைக்கும்
எந்த ஒரு மார்க்க காரியமும் ஒரே ஒரு ஹதீஸை அல்லது ஒரு சில ஹதீஸ்களை மட்டும் அடிப்படையாக வைத்து அதற்கு மாற்றமான அல்லது விளக்கமான மற்ற ஹதீஸ்களை ( அவை ஆதாரபூர்வமானவை எனில்) மறுத்து இயற்றலாகாது. அனைத்து ஆதாரபூர்வமான நபி மொழிகளும் கருத்தில் கொண்டு ஒருங்கிணைத்து அவற்றிற்கு முரணற்ற விதத்திலேயே எந்த ஒரு அமலும் செயல் படுத்தப் பட வேண்டும். இது எவ்வளவு பெரிய மார்க்க அறிஞராக இருப்பினும் அல்லது சாதாரண பாமர முஸ்லிமாக இருப்பினும் கடைபிடிக்க வேண்டிய இஸ்லாமிய விதிமுறையாகும். நபி ஸல் அவர்கள் ரமலான் மற்றும் ரமலான் அல்லாத இரவுகளில் 11 ரக்கத்துக்கள் அல்லது 13 ரக்அத்துக்களுக்கு மேல் தொழவில்லை எனும் நபி ஸல் அவர்கள் மனைவிகளாகிய அன்னை ஆயிஷா(ரலி) போன்றோர் அறிவிக்கும் ஹதீஸுக்கு மாற்றமாக யார் கூறினாலும் அல்ல்து யார் செயல் படுத்தினாலும் அது அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்பட உத்திரவாதம் இல்லை என்பதுடன் நிராகரிக்கப்படும் என்பதே ஹதிஸ்களின் மூலம் உள்ள எச்சரிக்கையாகும். அல்லாஹ் மிக அறிந்தவன் 5
September 26, 2009 22:24
//அனைத்து ஆதாரபூர்வமான நபி மொழிகளும் கருத்தில் கொண்டு ஒருங்கிணைத்து அவற்றிற்கு முரணற்ற விதத்திலேயே எந்த ஒரு அமலும் செயல் படுத்தப் பட வேண்டும்.// இதுவும் ஒரு ஆதாரப்பூர்வமான நபி மொழிதான்.இதையும் சேர்த்துத்தான் நீங்கள் சொன்னமாதிரி ஒரு முடிவுக்கு வரவேண்டும்.இது பலகீனமானது இல்லையே?//நபி (ஸல்)அவர்கள் ரமலான் மற்றும் ரமலான் அல்லாத இரவுகளில் 11 ரக்கத்துக்கள் அல்லது 13 ரக்அத்துக்களுக்கு மேல் தொழவில்லை// இதுவும் ஒரே நபி மொழிதான் திரும்ப திரும்ப ஒரே அறிவிப்பாளர் வழியாகத்தான் பல இடங்களில் வருகிறது.வேறு அறிவிப்பாளர் வழியாக வருவதாக தெரியவில்லையே?நபி(ஸல்)அவர்களோடு தொடர்பு படுத்தி பேசும் வேறு ஏதாவது நபிமொழி உள்ளதா? 6
September 27, 2009 23:23
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரி உம்மு ஹுதைஃபா அவர்களே // "இரவுத்தொழுகை என்பது இரண்டு இரண்டாகும்.சுப்குத்தொழுகையின் நேரம் வந்துவிடும் என பயந்தால் ஒரு ரக அத் வித்ர் தொழுங்கள்"என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்:இப்னு உமர்(ரழி)நூல்:புகாரி,முஸ்லிம்) // // இதுவும் ஒரு ஆதாரப்பூர்வமான நபி மொழிதான்.இதையும் சேர்த்துத்தான் நீங்கள் சொன்னமாதிரி ஒரு முடிவுக்கு வரவேண்டும்.இது பலகீனமானது இல்லையே? // தாங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீஸ் இரவு தொழுகை இரண்டு இரண்டு என்றும் அதை முடிக்கும் முன்னர் சுபுஹ் நேரம் வந்தால் ஒரு ரக் அத் வித்ருடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது. ( எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை ) // வேறு அறிவிப்பாளர் வழியாக வருவதாக தெரியவில்லையே?நபி(ஸல்)அவர்களோடு தொடர்பு படுத்தி பேசும் வேறு ஏதாவது நபிமொழி உள்ளதா? // பின் வரும் நபி மொழிகளையும் பார்க்கவும்.... // நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், பின் வித்ரு தொழுவார்கள் (சுருக்கித்தரப்பட்டுள்ளது) என்று இப்னுஅப்பாஸ் (ரலி) அறிவிக்கக்கூடிய ஹதீஸ் நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.// // பனிரெண்டு ரக்அத்களை அவர்கள் தொழுத விபரம் விரிவாகவும் இன்னொரு ஹதீஸில் கூறப்படுகிறது. முதலில் இரண்டு ரக்அத்களை சிறிய அளவில் தொழுவார்கள். பின்னர் நீண்ட, மிக நீண்ட அளவில் இன்னும் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். அதை விடவும் சிறியதாக இன்னும் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பின்பு இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள் என்று ஸைத் இப்னு காலித் அல் ஜுஹனீ(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் நஸயீயில் இடம் பெற்றுள்ளது// // உபை இப்னு கஃபு(ரலி), தமீமுத்தாரி (ரலி) ஆகிய இரு நபித் தோழர்களையும் பதினோரு ரக்அத் தொழ வைக்குமாறு உமர்(ரலி) அவர்கள் உத்தரவிட்டதாகத்தான் சான்று உள்ளது. (முஅத்தா) // ......ஆக இரவு தொழுகையின் எண்ணிக்கை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ்கள் ஆதார பூர்வமாக பல நூல்களில் இருக்கும் போது அதையும் இணைத்தே தாங்கள் காட்டியுள்ள ஹதீஸை விளங்க வேண்டும். இல்லையெனில் நபி வழியில் இரண்டிரண்டாக 13க்கும் அதிகமாக தொழுததற்கு ஆதாரம் வேண்டும், அதை விடுத்து எவ்வளவு வேண்டுமானாலும் தொழலாம் என்று முடிவெடுப்பது சரியான முடிவாக இருக்காது. அல்லாஹ் மிக அறிந்தவன். 7
September 28, 2009 09:39
அஸ்ஸலாமு அலைக்கும்.
நாம் ஏன் நமக்குள் சண்டையிட்டு்க் கொள்ள வேண்டும். யூதர்களும், கிறித்தவர்களும் முஸ்லிம்களுக்கு தொல்லையளிக்க காத்திருக்கின்றனர். தயவுசெய்து அவர்கள் வேலையை செய்யாதீர்கள். கருத்து வேறுபாடு 1400 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கியிருந்தது. தயவுசெய்து இத்தகைய விஷயங்களை பொதுவில் விவாதிக்காதீர்கள். தேவையெனில் தங்களுடைய தனிப்பட்ட ஈமெயிலில் பேசிக்கொள்ளுங்கள். இத்தகைய விவாதங்கள் ஒரு முடிவுக்கு வராது. மேலும் இவை நம்முடைய பலவீனங்களை மற்றவருக்கு வெளிப்படுத்தும். நாம் பலத்தை ஒற்றுமையின் மூலம் காண்பிக்க வேண்டும். அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னீப்பானாக. ஆமீன் 8
February 02, 2010 09:00
கருத்து எழுதுக :
|
|
ANEES FATHIMA :
அஸ்ஸலாமு அலைக்கும் எல்லா பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய நல்ல குறிப்புக்கள் |
|
sarfdin :
அருள் முருகன் சகோதரா
முஸ்லிம்களில் ப... |
|
Naseema :
அறிவுப்போட்டிகளை பல தளங்கள் வெளியிட... |
|
ummu afsy :
salaamz,ALLHA has given eough freedom for woman,so may all muslims and non-muslim must support all m... |
|
MOHAMED RAFI :
RAFI,
THIS VERY INFROMATIVE |
|
A.JAHIR HUSSAIN.Sharjah UAE { ATHALAIYUR } :
அஸ்ஸலாமு அலைக்கும்...
புனித மிகு ரமலா... |
|
nilam :
assalamu alaykkum i m seeking a job in riligius side |
|
peacfulmuslim :
why our arabs cant help to gaza to become an oil rich country ??[removed]void(0); |
|
Satyamargam.com :
Dear Banupriya,
Thanks for your visiting and your comment.
Are you participating in our quiz/s?
P... |
|
G.BANUPRIYA :
hello, i am banupriya from hindu regional,
but i also like ur website
thank u somuch
|
|
சஃபி :
எதிர்வரும் அக்டோபர் 3-14, 2010 தேதிகளில் ட... |
|
Lareena Abdul Haq :
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹ்..... |