சத்தியமார்க்கம்.காம்

உம்ரா கட்டாயக் கடமையா? print Email
ஐயமும்-தெளிவும் - முஸ்லிம்களுக்காக
செவ்வாய், 31 மார்ச் 2009 18:47

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

முதலில் அல்லாஹ்வுக்கும் அடுத்து உங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது வினா என்னவென்றால் நாங்கள் தொழிலுக்காக சவூதி அரபியா வந்த இடத்தில் இங்கிருந்து உம்ரா செய்யலாமா?

 

அடுத்தது என்னுடன் இருக்கும் ஒரு முஸ்லிம் நண்பர் சொன்னது உம்ரா கட்டாயக் கடமை என்று. தயவு செய்து பதில் தரவும். காரணம் எனக்கு எனது குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய முக்கிய பல கடமைகள் உள்ளன. உங்கள் பதிலை எதிர்பார்த்த வண்ணம். சலாம்

மின்னஞ்சல் வழியாக சகோதரர் ஹஸன்.

தெளிவு: வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்...

அன்புச் சகோதரர் ஹஸன்,

''தொழிலுக்காக சவூதி அரபியா வந்து உம்ரா செய்யலாமா?'' இந்த முதல் கேள்வியை எடுத்துக்கொள்வோம். தொழுகை, நோன்பு எனும் இறைவணக்கம் போன்று இறைவனை வணங்கும் சில வழிபாடுக் கிரியைகளை உள்ளடக்கியதுதான் ஹஜ்ஜும், உம்ராவும். எனவே, உங்கள் கேள்வியான உம்ராவோடு ஹஜ் குறித்தும் மிகச் சுருக்கமாக இங்குக் குறிப்பிடப் படுகின்றது.

பிற இறைவணக்கங்களை (பூமி, ஆகாயம்) எங்கிருந்து வேண்டுமானாலும் நிறைவேற்றலாம். உம்ராவை மக்கா நகரில் அமைந்த இறையில்லம் கஅபாவில் மட்டுமே நிறைவேற்ற வேண்டும்! ஹஜ்ஜுக் கடமையில், கஅபாவோடு அதை அடுத்துள்ள மினா, அரஃபாத், முஸ்தலிஃபா ஆகிய இடங்களில் வழிபாடுகள் செய்ய வேண்டும். தொலைதூரத்து நாடுகளிலிருந்தும் ஹஜ்ஜையும், உம்ராவையும் நிறைவேற்ற புனித இறையில்லம் அமைக்கப்பெற்ற மக்காவுக்குச் சென்றுவர வேண்டியிருப்பதால் அதற்கான பயண ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும்.

'ஹஜ்(ஜுக்குரிய காலம்) குறிப்பிட்ட சில மாதங்களாகும். அந்த மாதங்களில் ஒருவர் (தம்மீது) ஹஜ்ஜைக் கடமையாக்கிக் கொண்டால்...'' (அல்குர்ஆன் 2:197) 

''அந்த ஆலயத்தில், அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை'' (அல்குர்ஆன் 3:97)

பயணத்திற்கான பொருள் வசதி மற்றும் சென்றுவர உடல் வலிமை உள்ளவர்கள் மீது ஹஜ் எனும் இறைவணக்கம் கடமை என்பதை மேற்கண்ட இறைவசனங்களிலிருந்து விளங்கலாம். தொழிலுக்காக வந்த இடத்தில் ஹஜ்ஜை நிறைவேற்றலாமா?

''(ஹஜ்ஜின் போது வியாபாரம் செய்து) இறைவனின் அருளைத் தேடுவது உங்கள் மீது குற்றமில்லை'' (அல்குர்ஆன் 2:198)

உக்காழ், மஜன்னா, துல்மஜாஸ் ஆகியவை அறியாமைக் காலத்தில் கடை வீதிகளாக இருந்தன. இஸ்லாம் வந்ததும் அங்கே வியாபாரம் செய்வதை மக்கள் குற்றம் எனக் கருதினர்கள். அப்போது ''உங்கள் அருளைத் தேடுவது உங்கள் மீது குற்றமில்லை'' என்ற (2:198) வசனம் இறங்கியது. அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "ஹஜ்ஜுக் காலங்களில்" என்பதையும் சேர்த்து ஓதியிருக்கிறார். (நூல்: புகாரி 1770. 2050, 2098, 4519)

ஹஜ்ஜுக் கிரியைகளை நிறேவேற்றும்போது அதோடு வியாபாரம் போன்ற தொழில்களையும் செய்து கொள்வது குற்றமில்லை என இறைவசனமும், நபிவழி அறிவிப்பும் தெளிவுபடுத்துகின்றன. தொழிலுக்காக வந்த இடத்தில் உம்ராச் செய்யக்கூடாது என்று சொல்பவர்கள் அவர்கள் சொந்தக் கருத்தையே சொல்கிறார்கள். நாமறிந்து அதற்கான மார்க்கச் சான்றுகள் எதுவுமில்லை!

உம்ரா கட்டாயக் கடமையா?

ஹஜ்ஜைக் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே நிறைவேற்ற வேண்டும். உம்ராவை நிறைவேற்ற குறிப்பிட்ட நாட்கள் எதுவுமில்லை. எல்லா மாதங்களிலும் எல்லா நாட்களிலும் இஹ்ராம் அணிந்து உம்ரா செய்து கொள்ளலாம். ஹஜ்ஜைவிட உம்ராவுக்கு கிரியைகளும் குறைவானது. கஅபாவை வலம் வருவது, ஸஃபா மர்வாக்கிடையே ஒடுவது தலை முடியை மழித்தல் அல்லது குறைத்தல் ஆகிய வழிபாடுகளோடு உம்ராக் கடமை நிறைவேறி விடுகின்றது.

''மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். எனவே ஹஜ் செய்யுங்கள்!'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். (நீண்ட ஹதீஸின் சுருக்கம், நூல்: முஸ்லிம் 2599)

வசதியுள்ளவர்கள் மீது ஹஜ் செய்வது கடமை என்பது போல் உம்ராச் செய்வதும் கடமையாகும் என்று கூறுவதற்கு குர்ஆன் வசனமும், நபிவழி அறிவிப்பும் இல்லை!

உம்ராவின் சிறப்பை வலியுறுத்தி ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் உள்ளன!

ஓர் உம்ராச் செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும்... (நூல்கள்: புகாரி 1773.  முஸ்லிம் 2624. திர்மிதீ 855. நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா. முஅத்தா ஆகிய நூல்களிலும் இடம்பெற்றள்ளது)

''ரமளானில் செய்யப்படும் ஓர் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகரானதாகும், அல்லது என்னோடு ஹஜ் செய்வதற்கு நிகரானதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரி 1782, 1863. முஸ்லிம் 2408, 2409)

நபி (ஸல்) அவர்கள் செய்த உம்ராக்கள்.

நபி (ஸல்) அவர்கள் நான்கு உம்ராக்கள் செய்துள்ளார்கள்! என்ற அறிவிப்பு புகாரி 1778, 1780, 4148. முஸ்லிம் 2404, 2406, ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளன.

உம்ராவின் சிறப்பைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியிருப்பதாலும், நபி (ஸல்) அவர்கள் உம்ராச் செய்திருப்பதாலும் உம்ராச் செய்வது சிறப்பு மற்றும் - நபிவழி - சுன்னத்தாகும். ஆனால், உம்ரா கட்டாயக் கடமை என்று நிறுவ மார்க்கத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை!

உம்ரா கட்டாயக் கடமை; உம்ரா கடமை இல்லை என்ற இரு வேறுபட்ட கூற்றுகளும் அறிஞர்களின் கருத்தாகவே உள்ளன. எனவே உம்ரா கட்டாயக் கடமை என்று உங்களிடம் கூறிய முஸ்லிம் சகோதரரிடம் குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் கேளுங்கள்! கிடைத்தால் எங்களுக்கு அனுப்புங்கள், அதை நன்றியுடன் பரிசீலிப்போம், இன்ஷா அல்லாஹ்.

(இறைவன் மிக்க அறிந்தவன்).

கருத்துக்கள் (10)add comment
0
Hassan:
அஸ்ஸலமு அலைகும், எனது கேல்விக்கு பதில் அலித்தமைகு எனது மனமர்ன்ட நன்றிகல், மேலும் தொடர்ந்தும் இவ்வாரானா நடவடிக்கைகலை மேட்கொல்வதட்கு வல்ல அல்லாஹ் அருல் புரிவானாஹா, இப்படிக்கு ஹஸன்
1

April 01, 2009 08:56
0
சுல்தான், குவைத்:
உம்ராச் செய்வதும் கடமையாகும் என்பதை உணர்த்தும் பல நபிமொழிகள் வந்துள்ளன. அவைகளில் சில: ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாம் என்றால் என்னவென்று வினவியபோது, (الإِسْلاَمُ : أَنْ تَشْهَدَ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَأَنَّ مُحَمَّداً رَسُوْلُ اللهِ، وَتُقِيْمَ الصَّلاَةَ، وَتُؤْتِيَ الزَّكَاةَ، وَتَحُجَّ الْبَيْتَ وَتَعْتَمِرَ، وَتَغْتَسِلَ مِنَ الْجَنَابَةِ، وَتُتِمَّ الْوُضُوْءَ، وَتَصُوْمَ رَمَضَانَ) இஸ்லாம் என்பது: நிச்சயமாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை என்றும் நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்கள் என்றும் நீர் சாட்சி கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது, ஜகாத் கொடுப்பது, (அல்லாஹ்வுடைய) வீட்டை ஹஜ் செய்வது, உம்ராச் செய்வது, பெருந்தொடக்கிற்காக -ஜனாபத்திற்காக- குளிப்பது, உளுவை முழுமையாகச் செய்வது, ரமலானில் நோன்பு நோற்பது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் -ரலி, நூற்கள் : இப்னு குஸைமா, தாரகுத்னீ -இமாம் தாரகுத்னீ அவர்கள் இந்த அறிவிப்பின் அறிவிப்பாளர் வரிசை தரமானது, ஸஹீஹானது என்று கூறியுள்ளார்கள்.) عَنْ عَائِشَةَ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَلْ عَلَى النِّسَاءِ مِنْ جِهَادٍ قَالَ نَعَمْ عَلَيْهِنَّ جِهَادٌ لَا قِتَالَ فِيهِ الْحَجُّ وَالْعُمْرَةُ அல்லாஹ்வின் தூதர் அவர்களே! பெண்கள் மீது ஜிஹாத் கடமை ஏதும் உள்ளதா? என்று ஆயிஷா (ரலி) அவர்கள் வினவியதற்கு, ஆம்! அவர்கள் மீது சண்டை இல்லாத ஜிஹாத் செய்வது கடமையாகும். அது ஹஜ்ஜும் உம்ராவும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா -ரலி, நூற்கள்: அஹமத், இப்னுமாஜா) ஹஜ்ஜும் உம்ராவும் வாழ்நாளில் ஒரு தடவை மட்டுமே கடமையாகும். (اَلْحَجُّ مَرَّةٌ فَمَنْ زَادَ فَهُوَ تَطَوُّعٌ) ஹஜ் ஒரு தடவைதான் (கடமையாகும்). அதற்கு அதிகமாகச் செய்வது உபரியாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னுஅப்பாஸ் -ரலி, நூல் :அஹ்மத்) உபரியான ஹஜ் மற்றும் உம்ராவை அதிகமாக நிறைவேற்றுவது சுன்னத்தாகும். ( اَلْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ ) ஒரு உம்ரா மற்றொரு உம்ராவிற்கு இடைப்பட்ட (காலங்களில் நிகழும்) பாவங்களுக்கு பரிகாரமாக அமைகின்றது. ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சொர்க்கத்தைத் தவிர வேறில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா-ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்) http://www.islamkalvi.com/fiqh/haj/01.htm நன்றி: இஸ்லாம்கல்வி.காம்
2

April 02, 2009 07:20
0
முஸ்லிம்:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பின் சகோதரர் சுல்தான் சத்தியமார்க்கம் இணையதள சார்பாக வைக்கப்பட்ட உம்ராச் செய்வது கட்டாயக் கடமை அல்ல என்ற கருத்து சரி எனப்படுகின்றன. //உம்ராச் செய்வதும் கடமையாகும் என்பதை உணர்த்தும் பல நபிமொழிகள் வந்துள்ளன. அவைகளில் சில: ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாம் என்றால் என்னவென்று வினவியபோது, (الإِسْلاَمُ : أَنْ تَشْهَدَ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَأَنَّ مُحَمَّداً رَسُوْلُ اللهِ، وَتُقِيْمَ الصَّلاَةَ، وَتُؤْتِيَ الزَّكَاةَ، وَتَحُجَّ الْبَيْتَ وَتَعْتَمِرَ، وَتَغْتَسِلَ مِنَ الْجَنَابَةِ، وَتُتِمَّ الْوُضُوْءَ، وَتَصُوْمَ رَمَضَانَ) இஸ்லாம் என்பது: நிச்சயமாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை என்றும் நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்கள் என்றும் நீர் சாட்சி கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது, ஜகாத் கொடுப்பது, (அல்லாஹ்வுடைய) வீட்டை ஹஜ் செய்வது, உம்ராச் செய்வது, பெருந்தொடக்கிற்காக -ஜனாபத்திற்காக- குளிப்பது, உளுவை முழுமையாகச் செய்வது, ரமலானில் நோன்பு நோற்பது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் -ரலி, நூற்கள் : இப்னு குஸைமா, தாரகுத்னீ -இமாம் தாரகுத்னீ அவர்கள் இந்த அறிவிப்பின் அறிவிப்பாளர் வரிசை தரமானது, ஸஹீஹானது என்று கூறியுள்ளார்கள்.)// - நீங்கள் சுட்டிக்காட்டிய தளத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்தில் இந்த ஹதீஸை ஸஹீஹான ஹதீஸ் என்றே வைத்துக்கொண்டாலும் இதில் உம்ராச் செய்வது கடமையாகும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இஸ்லாம் என்றால் என்ன? என்று கேள்வி கேட்கிறார். உம்ராச் செய்வதும் இஸ்லாம் என்கிற ரீதியில் நபி (ஸல்) அவர்களின் பதில் அமைந்துள்ளது. உம்ராச் செய்வதும் இஸ்லாம் என்றே புரிந்து கொள்ளவேண்டும். ஸஹீஹான ஹதீஸ்கள் //( بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ ) இஸ்லாம் ஐந்து காரியங்களின்மீது நிறுவப்பட்டுள்ளது. அவை: நிச்சயமாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை என்றும் நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்கள் என்றும் சாட்சி கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது, ஜகாத் கொடுப்பது, ஹஜ் செய்வது, ரமலானில் நோன்பு நோற்பது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னுஉமர் -ரலி, நூற்கள் : புகாரீ,முஸ்லிம்)// புனியல் இஸ்லாம் அலல் கம்ஸா - இஸ்லாம் ஐந்து காரியங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது. 1) ஓர் இறைவனை நம்பிக்கை கொள்வது 2) தொழுவது 3) (கடமையான) ஸகாத் கொடுப்பது 4) நோன்பு நோற்பது 5) ஹஜ் செய்வது (இது சக்திப்பெற்றவர் மீது கடமையாகும்) உம்ராச் செய்வதும் கடமை என்றால் 6) ஆகிவிடும். பெருந்தொடக்கிற்காக குளிப்பது 7) ஆகிவிடும். உளுவை முழுமையாகச் செய்வது 8) ஆகிவிடும். உம்ராச் செய்வது கடமை என்பதற்கு ஸஹீஹான ஹதீஸென நீங்கள் குறிப்பிட்ட ஹதீஸை ஏற்றுக்கொண்டால் இவ்வளவு முரண்பாடுகள் ஏற்படும். எனவே உம்ராச் செய்வது கடமை என்பதற்கு அப்படிச் சொல்லாத ஒரு ஹதீஸை வைத்திருப்பது இங்கு பொருத்தமாக இல்லை. இங்கே சொல்லியதில் மாற்றுக் கருத்து இருப்பின் பகிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் சத்தியமார்க்கம் தொடர் வாசகர் பலரில் ஒருவனாகிய நானும் உம்ராச் செய்வது கட்டாயக் கடமை அல்ல என்ற கருத்தில் இருப்பதால் ஆதாரங்களுடன் வைக்கப்படும் கருத்தை ஏற்றுத் திருத்திக்கொள்ள வசதியாக இருக்கும். நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள அடுத்தக் கருத்துகளையும் தொடர்ந்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.
3

April 03, 2009 13:00
0
rifzeen:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... நீங்கள் கூறுவது போல் உம்ரா கடமையில்லை என்றால், அல் குர்ஆன் 2:196 ஆவது வசனத்தின் அர்த்தம் என்ன?
4

December 31, 1969 23:00
0
Mohamed Abubacker Sidique:
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அன்பு சகோதரர்களே,
உம்ரா பற்றி எனக்கொரு சந்தேகம். இந்த மாதம் நான் உம்ரா பயணம் மேற்கொள்கிறேன். இது தான் முதல் முறை. நான் மக்காவில் இருக்கும்போது, மரணித்த மற்றொருவருக்காக அவர் சார்பிலும் நான் உம்ரா நிறைவேற்றலாமா? தயவுசெய்து இது குறித்து அறிவுறுத்துங்கள்.

நன்றி. அன்புடன்,
முஹம்மத் அபூபக்கர் சித்தீக்
5

March 10, 2010 13:37
0
jasima:
assalamu alaikkum, insha allah adutha matham naan umravukku selkiren.yenathu santhekathai theerthu vayyungal.
1. kabavin vasalukkum hajarul asvath kallirum idaippatta idathilum ketka padum dua yetrukollapaduma?
2. madhinavil ulla kuba pallivasalil 2 rakath tholuvathu , 1 umra seithathu polaguma?
3. masjid nabavi-yil sorgathin poonga yenum idathil 7 thoongal irukkindranavaam,andha thoongalukku pakkathilnindruthola venduma?
*azhuthu munangum thoon
*paathukaappu thoon
*thoothu kuluvinar thoon
*abu lubabavudaiya thoon
*kattilin thoon
*zibril thoon
*ayisha thoon
4. zam zam thanneer kudikkum pothu yethenum dua irukiratha? appodhu ketkum dua yetrukkolla paduma?
5.jabal uhad, jabal noor, jabal rahmath agiya malaikalukku sendral tholugalama? dua ketkalaama? adhartkaga yethenum sirappu irukkiratha?
please! konjam viraivil bathil anuppavum, assalamu alaikkum(var........)
6

April 19, 2010 13:15
0
jasima:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
என் கேள்விகளுக்கு விரிவாக பதில் தரவும். அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவான்.
7

May 17, 2010 14:13
0
சத்தியமார்க்கம்.காம்:
சகோதரி ஜஸீமா,

வ அலைக்குமுஸ்ஸலாம்.

தங்கள் கேள்விகளுக்கு மேலதிக விளக்கங்களை நமது சகோதர தளமான இஸ்லாம்கல்வி.காம் வெளியிட்டுள்ளது:
http://www.islamkalvi.com/fiqh/haj/index.htm

கேட்டுப் பயனடையுங்கள்.
8

May 18, 2010 09:37
0
தமிழ்முஸ்லிம்ட்யூப்:
சகோதரர் முஹம்மது அபூபக்கர் சித்தீக்,

உங்களுக்கான பதில்

http://tamilmuslimtube.magnify.net/video/2986300729932992300929653021296
9

May 18, 2010 12:04
0
Basheer:
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் ரிஃப்ஸீன்,
"மேலும், ஹஜ்ஜையும் உம்ராவையும் நீங்கள் அல்லாஹ்வுக்காக நிறைவு செய்யுங்கள்.." எனத் தொடங்குகின்றது அந்த வசனம்.
ஹஜ் உம்ரா மட்டுமல்ல, அனைத்து காரியங்களையும் அல்லாஹ்விற்காக (அல்லாஹ்வின் திருப்திக்காக) செய்ய இஸ்லாம் வலியுறுத்துகிறது. அப்படியாயின், நம் வாழ்வில் செய்யும் அனைத்து நற்செயல்களும் கடமையாகிவிடுமா?
மேலும், அதன் முந்தைய வசனமும் "இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்" எனத் தொடங்குகிறது. பின்னர் எவ்வாறு கடமையான தர்மமும் (ஜக்காத்) கடைமையல்லாத உபரியான தர்மமும் (ஸதகா) வந்தது.
அது போலத்தான் இதுவும்..
நிறைகள் இறைவனைச் சேரும். குறைகள் என்னைச் சேரும். எனது கருத்தில் ஏதேனும் தவறு இருப்பின் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன்.
10

May 18, 2010 13:36

கருத்து எழுதுக :
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

Random Quran Verses

2:119 (நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமுட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம். நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர்.

விருப்பத் தேர்வுகள்


You are here  : முகப்பு இஸ்லாம் ஐயமும்-தெளிவும் முஸ்லிம்களுக்காக உம்ரா கட்டாயக் கடமையா?